என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை"
- அருண் வீட்டினுள் தூக்குபோட்டு கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சோலார் இரணியன் தெரு வை சேர்ந்தவர் துரைசாமி மகன் அருண் (வயது 37). இவர் அரசு பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி திவ்யா (34). இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
அருணிற்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் அடி க்கடி குடித்துவிட்டு வீட்டி ற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் திவ்யா தனது 2 குழந்தைகளுடன் அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து அருண் போன் செய்து திவ்யாவை வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.
ஆனால் அவர் 2 நாள் கழித்து வருவதாக கூறினார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சலில் இருந்த அருண் வீட்டினுள் தூக்குபோட்டு கொண்டார். இதைபார்த்த உறவினர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அருண் ஏற்க னவே இருந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து அவரது மனைவி திவ்யா ஈரோடு தாலுகா போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.
அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கருப்புசாமி சேலையால் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
- பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடு த்துள்ள மேட்டுப்புதூர், கினிப்பாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் சென்னியம்மாள் (50). இவரது கணவர் குருநாதன் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.
இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். கடைசி மகன் கருப்புசாமி (19). டிரைவராக வேலை பார்த்து வந்தார். மதுவுக்கு அடிமையான கருப்புசாமி தனது தாய் சென்னி யம்மாளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
மதுவுக்கு அடிமையானதை நினைத்து கருப்புசாமி கடந்த சில நாள்களாகவே விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்ப வத்தன்று மாலை சென்னி யம்மாள் வெளியில் சென்றி ருந்தார். சிறிது நேரம் கழித்து அவரது மகள் வீட்டுக்கு வந்து பார்த்த போது கருப்புசாமி சேலையால் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சி யடைந்த சென்னியம்மா ளின் மகள் அக்கம் பக்கத்தி னரின் உதவியுடன் கருப்பு சாமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கருப்புசாமி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சென்னிய ம்மாள் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்